/* */

பிரியங்கா கைதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

HIGHLIGHTS

பிரியங்கா கைதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
X

ஈரோடு சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பு பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியாயினா். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் பிரியங்காகாந்தியை, அம்மாநில போலீஸாா் கைது செய்தனா். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்புப் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசைக் கண்டித்தும், பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் முழக்கமிட்டனர். இதில், சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ், துணைத் தலைவா் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Updated On: 5 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?