Begin typing your search above and press return to search.
பன்னீர்செல்வம் பூங்காவில் இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்
பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
HIGHLIGHTS
பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்து வைக்க கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பிஜேபி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றதை கொண்டாடும் வகையில், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைதுறை தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவரான ராஜேஷ், ராஜப்பா அரவிந்தராஜ், புனிதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி சார்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.