/* */

ஈரோட்டில் ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது

ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், வியாபாரிகளிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

ஈரோட்டில்  ரூ.2 கோடி மோசடி செய்த அதிமுக பிரமுகர் மகன் கைது
X

கைது செய்யப்பட்ட வினோத்குமார்.

ஈரோடு, நேதாஜி காய்கறி சந்தையில், வியாபாரிகளிடம் வீட்டுமனை வழங்குவதாக கூறி, ரூ.2 கோடி வரை பணம் வசூலித்து, சங்கத்தின் நிர்வாகிகளாக இருக்கக்கூடிய அதிமுக பிரமுகர்கள் மோசடி செய்ததாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள், அவர்களது உறவினர்கள் உள்பட 11 பேர் மீது ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் காய்கறி வியாபாரிகள் சங்க பொருளாளர் வைரவேல் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். மேலும், 10 பேர் தலைமறைவாக இருந்தனர்.

இதனையடுத்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், அதிமுக பிரமுகர் பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வினோத் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 9 பேரை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

Updated On: 3 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!