/* */

ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி: டிஎஸ்பி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் மாவட்ட தேர்தல் பிரிவு டிஎஸ்பி தகவல்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி: டிஎஸ்பி தகவல்
X

ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் மாவட்ட தேர்தல் பிரிவு டிஎஸ்பி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் நகப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 22 -ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்களும், பவானி நகராட்சியில் 30 ஆயிரத்து 282 வாக்காளர்களும், கோபி நகராட்சிகள் 47 ஆயிரத்து 545 வாக்காளர்களும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 16 ஆயிரத்து 933 வாக்காளர்களும், சத்யமங்கலம் நகராட்சியில் 33 ஆயிரத்து 86 வாக்காளர்களும், 42 பேரூராட்சிகளில் 4 லட்சத்து 1, 538 வாக்காளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 72 ஆயிரத்து 575 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.மாவட்டம் முழுவதும் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 113 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி அண்ணாதுரை கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 1251 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதிக மக்கள்தொகை கொண்ட 35 இடங்களில் உள்ள 113 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க செய்யப்படும். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அமைதியாக தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று இறுதிப் பட்டியல் வெளியானதும், வேட்பாளர்களை பொறுத்து பதட்டமான ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 3 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்