/* */

அதிமுக 50வது ஆண்டு பொன்விழா: ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மரியாதை

அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை...*

HIGHLIGHTS

அதிமுக 50வது ஆண்டு பொன்விழா: ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மரியாதை
X

அதிமுகவின் 50வது ஆண்டுவிழாவை முன்னிட்டு,  ஈரோடு மாநகர் மாவட்ட சார்பில் , பன்னீர்செல்வம் பூங்காவில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், ஈரோடு மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றினர்.

அதை தொடர்ந்து, பொன்விழா ஆண்டை முன்னிட்டு, அதிமுகவினர் இனிப்பு வழங்கினர். அதனை தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள, மறைந்த முதல்வர்கள் டாக்டர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ சிலைக்கு, மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Updated On: 17 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  2. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  5. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  6. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி