ஈரோடு: 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள்

X
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
By - S.Gokulkrishnan, Reporter |5 Dec 2021 11:15 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் 42 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 40 ஆயிரத்து 208 மனுக்கள் ஏற்கப்பட்டன. பட்டா மாற்றம், இலவச பட்டா, போலீஸ் நடவடிக்கை, தையல் இயந்திரம், நிதியுதவி, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகள் சார்ந்த கோரிக்கைகளாக இருந்த 36 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதி மனுக்கள் திட்டப்பணிகளாக உள்ளன. அவை, அரசு மூலம் திட்ட வரைவு தயாரித்து, நிதி ஒதுக்கீடு பெற்று விரைவாக நிறைவேற்றப்படும். தற்போது இத்திட்டம், 'முதல்வரின் முகவரி' என்ற துறையாக மாற்றப்பட்டுள்ளதாக, ஈரோடு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி குமரன் தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu