/* */

விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
X
யானைகள் பிடுங்கி எடுத்த தென்னங்கன்றுகளுடன் விவசாயி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகதுக்கு உட்பட்டது ஜீரகள்ளி வனச்சரகம். இந்த வனச்சரகதுக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்(30). இவர் தன்னுடைய 2 ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் லோகேஸின் தோட்டத்துக்குள் புகுந்து 40 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை பிடுங்கி சேதம் செய்தது. மேலும் 5 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும்,தேக்கு மரங்களையும் பிடுங்கி சேதம் செய்தன.

இதனை கண்ட விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கே முகாமிட்டு தென்னை மரங்களை சேதம் செய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது" யானைகள் சேதம் செய்த தென்னை மரங்களுக்கு அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை ஒட்டி ஆழமான அகழி தோண்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.

Updated On: 19 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...