/* */

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

புங்கம்பள்ளி அருகே முன்னாள் சென்ற மொபட் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே  இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி
X

பலியான முதியவர் பழனிசாமி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தேசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித்தொழிலாளி. இவர், இன்று மாலை புங்கம்பள்ளியிலிருந்து தேசிபாளையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னர் வந்த இருசக்கர வாகனம் பழனிச்சாமி சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியது‌. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பழனிச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புஞ்சை புளியம்பட்டி போலீசார் பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 2:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்