/* */

சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலி

ஈரோடு வைராபாளையம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலி.

HIGHLIGHTS

சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலி
X

பைல் படம்.

ஈரோடு வைராபாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 75). இவர் நேற்று தனது தோட்டத்திற்கு சென்று விட்டு சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வைராபாளையம் வாட்டார் ஆபீஸ் ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக தண்ணீர் டேங்குடன் வந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மாரிமுத்து மீது மோதியது. டிராக்டரின் முன்பக்க டயர் மாரிமுத்துவின் தலைமீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாரிமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  7. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  8. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  9. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  10. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்