/* */

மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி

மொடக்குறிச்சி அருகே கண்பார்வையில் குறைபாடு உள்ள முதியவர் தண்ணீர் என நினைத்து என்ஜின் ஆயிலை குடித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

HIGHLIGHTS

மொடக்குறிச்சி அருகே என்ஜின் ஆயிலை குடித்த முதியவர் பலி
X

பைல் படம்.

மொடக்குறிச்சி அடுத்த கண்ணுடையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 72). இவருக்கு கண்பார்வையில் குறைபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று துரைசாமி வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது மகன் கேட்ட போது தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த என்ஜின் ஆயிலை குடித்துவிட்டதாக துரைசாமி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் தந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு துரைசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி துரைசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்