/* */

அந்தியூர்: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

அந்தியூர் அருகே மூட்டு வலி குணமாகவில்லை என்ற வருத்தத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

HIGHLIGHTS

அந்தியூர்: விஷம் குடித்து முதியவர் தற்கொலை
X

பைல் படம்.

ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி சக்தி நகர் வெள்ளாளபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). விவசாயி. இவருக்கு நீண்ட நாட்களாக மூட்டு வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் மூட்டு வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த ராமசாமி வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது மகன் தமிழ்வாணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து ராமசாமியை மீட்டு ஆப்பக்கூடல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 11 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’