ஈரோட்டில் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தை!

ஈரோட்டில் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தை!
X
ஈரோட்டில் நடந்த இயற்கை வேளாண் பொருட்கள் சந்தையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

ஈரோட்டில் நடந்த இயற்கை வேளாண் பொருட்கள் சந்தையை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்தவும். பொதுமக்களுக்கு நஞ்சில்லா காய்கறியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, ஈரோடு வ.உ.சி. பூங்கா நடைபயிற்சி மைதானத்தில் முதல்முறையாக இயற்கை வேளாண்மை பொருட்கள் சந்தை நேற்று காலை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சந்தையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இயற்கை விவசாயிகள் 14 பேர் கலந்துகொண்டு புடலை, சுரைக்காய், வெள்ளரி, கத்தரிக்காய், பீர்க்கங்காய், கொத்தவரை, பாகற்காய், தேங்காய் போன்ற காய் கறி, கீரை வகைகள், பழங்கள் ஆகியன விற்பனை செய்யப்பட்டது. மேலும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களும் இடம்பெற்றன.

இதில் தோட்டக்கலை துணை இயக்குனர் குருசரஸ்வதி, ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் சாவித்ரி, வேளாண்மை துணை இயக்குனர் ஸ்ரீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story
Similar Posts
குழந்தை திருமண தடையை மீறிய இளைஞர் கைது
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்!
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.6) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு!
பவானியில் காதல் மனைவி சடலத்துடன் மது போதையில் தூங்கிய கணவன்: சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை!
ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டுகளை தரையில் போட்டு இறப்பு சான்றிதழ் கேட்ட மக்கள்!
முதிய தம்பதி படுகொலையை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஈரோட்டில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 290 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியா்!
ஈரோட்டில் இயற்கை வேளாண் பொருட்கள் சந்தை!
இ.பி.எஸ். பிறந்த நாளுக்கு நாமக்கலில் அதிமுகவினர் தீவிர ஏற்பாடு
42 வயது வியாபாரி உடலுறுப்புகள் தானம்-மரணம் தாண்டிய மனிதநேயம்
சேலம் அங்கன்வாடி ஊழியர்கள் 2‑ம் நாளாக போராட்டம்
குடி பழக்கத்தால் சுழன்ற குடும்பம்
கடன் தொல்லையால் ஆசிட் குடித்த வியாபாரி மரணம்