தாளவாடி வட்டத்தில் நாளை (மார்ச் 19) நடைபெற இருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தேதி மாற்றம்

தாளவாடி வட்டத்தில் நாளை (மார்ச் 19) நடைபெற இருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தேதி மாற்றம்
X
தாளவாடி வட்டத்தில் நாளை (மார்ச் 19) நடைபெற இருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வருகிற மார்ச் 26ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தாளவாடி வட்டத்தில் நாளை (மார்ச் 19) நடைபெற இருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வருகிற மார்ச் 26ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டத்தில் நாளை (மார்ச் 19ம் தேதி) நடைபெற இருந்த "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" சிறப்பு முகாமானது நிர்வாக காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, வருகிற 26ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் 26ம் தேதியன்று காலை 9 மணி முதல் மறுநாள் 27ம் தேதி காலை 9 மணி வரை தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் (சேவைகள்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கள ஆய்வின்போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், மேம்பட்ட சேவைகள் வழங்குதல் மற்றும் திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண்பார். மேலும், 26ம் தேதியன்று மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை தாளவாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறப்பட உள்ளது.

எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக இந்த முகாமினை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story