ஈரோடு | மே 1ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை!

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, (1ம் தேதி) டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் எதிர்வரும் 1ம் தேதி மே தினத்தை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபான விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மேற்கண்ட தினத்தில் மூடப்பட வேண்டும் எனவும், அன்றைய தினத்தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மே 1ம் தேதி முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 மதுபான உரிமதலங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu