ஈரோடு மாவட்டத்தில் வரும் 29ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் வரும் 29ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் தகவல்!
X
உலக தண்ணீர் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் மார்ச் 29ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

உலக தண்ணீர் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் மார்ச் 29ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தையொட்டி, மார்ச் 29ம் தேதியன்று காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (01.04.2024 முதல் 28.02.2025 வரை) குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்படும்.

மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Next Story