ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஜன.8ல் துவக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் ஜன.8ம் தேதி துவங்குகிறது என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் (டிஎன்பிஎஸ்சி) தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஜன.8ம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது https://forms.gle/3FNSWCaHj9CKRqwW6 என்ற கூகுள் ஃபார்ம் லிங்கில் வரும் ஜன.6ம் தேதிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த ஆண்/பெண் இருபாலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0424-2275860, 94990 55943 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu