மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறையில் ரூ.7.48 கோடியில் பொன்மஞ்சள் குறுங்குழும தொழிற்சாலை: ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு

அவல்பூந்துறைடில் மஞ்சள் பதப்படுத்தும் ஈரோடு பொன் மஞ்சள் குறுங்குழும தொழிற்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறையில் ரூ.7.48 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பொன்மஞ்சள் குறுங்குழும தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரூ.7 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில், பொன்மஞ்சள் குறுங்குழும தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், கொடுமுடி அருகே உள்ள கொங்குடையாம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நொய்யல் கயிறு குழுமத்தில் ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், ஈரோடு விற்பனைக் குழு வேளாண்மை துணை இயக்குனர் சாவித்திரி உள்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu