ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்.1) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, கலைஞரின் கனவு இல்லம், குடிநீர் திட்டப்பணிகள், சாலை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் மேலும் நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் மற்றும் முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் உள்ளிட்ட பதிவேடுகளை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோரிக்கை மனுக்கள் குறித்த பதிவேடு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கோரிக்கை மனுக்கள் குறித்த பதிவேடு, முடிவுற்ற திட்டப்பணிகளுக்கு பட்டியல் சமர்ப்பித்தல் குறித்த பதிவேடு, வரிவசூல் குறித்து நிலுவையில் உள்ள இனங்கள் குறித்த ஆய்வு, இணையதளத்தின் மூலம் கட்டிட அனுமதி நிலுவை குறித்த விபரங்கள், 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு குறித்த பட்டியல் விபரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ரவிச்சந்திரன், தனலட்சுமி (கிராம ஊராட்சி) வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், உதவி பொறியாளர் பிரகாஷ் உட்பட துறை சார்ந்த பணியாளர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu