ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.24) மின்தடை செய்யப்படும் இடங்களின் விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.24) மின்தடை செய்யப்படும் இடங்களின் விவரம்

கோப்பு படம்.

பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை துணை நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தளவாய்பேட்டை துணைமின் நிலையத்தில் நாளை (ஏப்.,24) திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தளவாய்பேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

சுக்காநாயக்கனூர், சின்னாநாயக்கனூர், காட்டூர், கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகாடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரிய மேட்டூர், சின்னமேட்டூர், நல்லா நாயக்கனூர், காடையாம்பட்டி, எலவமலை, லட்சுமி நகர், தளவாய்பேட்டை, ஜம்பை, பருவாச்சி, வடமலைப்பாளையம், பாலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story