/* */

அந்தியூர் அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டடம் இடிக்கும் பணி துவக்கம்

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் 30 ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட பழுதடைந்த கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூர் அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டடம்  இடிக்கும் பணி துவக்கம்
X

கட்டிடத்தை இடிக்கும் பணி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன், மூன்று ஓட்டு பள்ளி கட்டடங்களும், பத்து ஆண்டுகளுக்கு முன் இரண்டு பள்ளி அறை கட்டடங்களும் கட்டப்பட்டன. இந்த கட்டடங்கள் பழுதடைந்ததால், இக்கட்டடத்தை இடித்து விட்டு வேறு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ-விடம் பள்ளி தலைமையாசிரியை பானுமதி மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, இக்கட்டடத்தை இடித்து விட்டு, இதே இடத்தில் நபார்டு வங்கி மூலம், மாற்று கட்டிடம் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தார். இதை தொடர்ந்து. பொதுப்பணித்துறை சார்பில், பழுதடைந்த பழைய பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

Updated On: 5 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...