/* */

ஈரோட்டில் மினி பஸ் மோதி போட்டோகிராபர் உயிரிழப்பு

ஈரோட்டில், மினி பஸ் மோதி போட்டோகிராபர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் மினி பஸ் மோதி போட்டோகிராபர் உயிரிழப்பு
X

ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதிவாணன். இவருடைய மகன் கரண்குமார் (வயது 23). இவர், ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை, ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதி வழியாக சவிதா சிக்னல் நோக்கி கரண்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

சவிதா சிக்னலுக்கு அருகில் பாரதி வீதியில் சென்றபோது, பின்னால் வந்து கொண்டு இருந்த மினி பஸ், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்த கரண்குமார் மீது, மினி பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கரண்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் இறந்த கரண்குமாரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 30 Nov 2021 8:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?