/* */

பவானி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது

பவானி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

பவானி அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது
X

தீயணைப்பு துறையினர் தீயிணை அணைத்த போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாய கூலி தொழிலாளியான இவர் வீட்டின் அருகே குடிசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற போது, திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.


தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜான்சன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் வீட்டில் இருந்த எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து சிலிண்டரை அப்புறபடுத்தின் காரணமாக பெரும் அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருப்பதாக தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 April 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...