ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு
X
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று, 3 மாதத்துக்கு பின்பு நேற்று 123 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு 242 ஆக அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் தொற்று வேகமெடுத்து வருவதால் சுகாதாரத்துறையினர் கவலை அடைந்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 232 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 776 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 712 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future