Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: அச்சத்தில் மக்கள்
ஈரோடு இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெதுவாக உயர்ந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இன்று புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 687 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்தனர். தற்போது 11 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 734 பேர் பலியாகி உள்ளனர்.