ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 64 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 64 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 191 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் 3 ஆயிரத்து 339 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 69 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் புதிதாக நேற்று ஒரே நாளில், 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 326 ஆக உயர்ந்தது.

இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 452 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 191 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 1,141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 733 பேர் பலியாகி உள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business