ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா.

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா.
X
பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 153 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 3 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 55 பேருக்கு தொற்று உறுதியானது.இந்தநிலையில் இன்று புதிதாக 47 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 420 ஆக உயர்ந்தது.

இதில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 772 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 153 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தற்போது 915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 733 பேர் பலியாகி உள்ளனர்.

Tags

Next Story
ai healthcare products