/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 184 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் இன்று 818 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 184 பேருக்கு கொரோனா
X

கோப்பு படம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 966 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 203 பேருக்கு தொற்று இருந்தது. இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக 184 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால்‌ மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 537 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 818 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 377 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு 730 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது தொற்று உள்ள 3 ஆயிரத்து 430 பேர் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Updated On: 10 Feb 2022 4:30 PM GMT

Related News