Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 73 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 68 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று புதிதாக 72 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 188ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 668 பேர் குணமடைந்தார்கள்.
இன்று மட்டும் 73 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 824 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 696 பேர் பலியாகி உள்ளனர்.