ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒருவர் உயிரிழப்பு

பைல் படம்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார். நேற்று 56 வயது ஆண் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 655 பேருக்கு பரிசோதனை செய்ததில் 72 பேரும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனை விகிதம் 0.9% ஆகும்.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,826 பேர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,02,263 பேர். தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 881 பேர். இதுவரை 682 பேர் உயிரிழந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu