/* */

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி அந்தியூரில் ஆலோசனை கூட்டம்

அந்தியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் பற்றி அந்தியூரில் ஆலோசனை கூட்டம்
X

அந்தியூரில்  மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட உள்ள ஆரப்பாட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, அந்தியூரில் வரும் 26ம் தேதி மற்றும் 27ம் தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

முன்னதாக, அந்தியூர் ஒன்றிய செயலாளர் சிறுத்தை தங்கராசு வரவேற்றார்.அந்தியூர் தொகுதி செயலாளர் க. வெற்றிச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஆர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில், வடக்கு மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ், ஈஸ்வரன், மாரசாமி, கர்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 May 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...