/* */

கோபி: சட்டவிரோதமாக மண் அள்ளிய லாரி மற்றும் பொக்லைன் பறிமுதல்

கோபி அருகே சட்டவிரோதமாக மண் அள்ளிய இரண்டு பேரை போலீசார் கைது செய்ததோடு லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கோபி: சட்டவிரோதமாக மண் அள்ளிய லாரி மற்றும் பொக்லைன் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட உக்கரம் கரட்டுப்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மண் வெட்டி கடத்தப்படுவதாக உக்கரம் கிராம நிர்வாக அலுவலர் சபரிவாசனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சபரிவாசன் அளித்த புகாரில் பேரில், கடத்தூர் போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது, பொக்லைன் இயந்திரம் மூலம், மண் வெட்டி லாரியில் நிரப்பி கொண்டிருந்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், கேத்தாம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலபதி, தாசநாயக்கனூரை சேர்ந்த அரவிந்த் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம், சட்டவிரோதமாக லாரியில் மண் நிரப்பியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 27 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...