/* */

சத்தியமங்கலம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

வடிகால் பணியின் போது, கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி
X

கவிழ்ந்து விழுந்த கலவை எந்திரம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த நஞ்சப்பகவுண்டன்புதூர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கான்க்ரீட் கலவை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சத்தியமங்கலம் - நெகமம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், நிலைதடுமாறி சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கருப்பசாமி, பவானிசாகர் பகுதியை சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  8. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  9. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  10. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...