பவானி அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்புளுதியூர் முத்தாளம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் குமார். ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 25). இவர் கடந்த 5-ம் தேதி கோவையில் உள்ள தனியார் கல்லூரிக்குச் சென்று சான்றிதழ்களை வாங்கி வருவதாக கூறி புறப்பட்டுச் சென்றார்.இந்நிலையில், சித்தோடு லட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் அருகே எலி மற்றும் மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அப்பகுதியினர் முதலுதவி சிகிச்சை அளித்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, சித்தோடு போலீசில் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu