/* */

நவ. 1 முதல் வகுப்புகள் தொடக்கம்: பள்ளிகளில் தூய்மைப்பணி தீவிரம்

வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வகுப்புகளில் தூய்மைப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நவ. 1 முதல் வகுப்புகள் தொடக்கம்: பள்ளிகளில் தூய்மைப்பணி தீவிரம்
X

வகுப்பறைகளில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு, ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு செப்டம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 1-ல் இருந்து, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடக்க உள்ளது.

இதுபற்றி பள்ளி கல்வித் துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 1,287 அரசு துவக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. 1,06,520 மாணவ, மாணவியர் இதில் பயில்கின்றனர். ஈரோடு மாநகராட்சியில் உள்ள, 73 பள்ளிகளில், 15,148 மாணவ, மாணவியர் உள்ளனர்.

பவானி, பவானிசாகர், கோபி, பவானி நகராட்சியில் உள்ள, 26 பள்ளிகளில், 5361 மாணவ, மாணவிகள் உள்ளனர். நகர்புற பஞ்சாயத்துகளில் உள்ள, 268 பள்ளிகளில், 23,427 மாணவ,மாணவியர் பயில்கின்றனர். அரசு பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடக்கிறது. நவம்பர் 1ல் பள்ளிகள் திறக்கப்படும். மாணவ, மாணவிகளின் உடல்நிலை குறித்து தினமும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 28 Oct 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...