Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நடைபெற்று வருவதாக, கலெக்டர் தகவல்.
HIGHLIGHTS
இதுகுறித்து, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:
கோழி வளர்ப்போருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், கழிச்சல் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தி, பொருளாதார இழப்பை தடுக்கும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை, ஈரோடு மாவட்டத்தில், அனைத்து கிராம பகுதிகளிலும், மாலை நேரங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதன் மூலம், கோழிகளை வளர்ப்போர், தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு, வெள்ளை கழிச்சல் நோய்கள் வராமல் தடுக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.