/* */

பவானி ஆற்றில் முழ்கி செல்போன் விற்பனையாளர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிஅணை பவானி ஆற்றில், செல்போன் விற்பனையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி ஆற்றில் முழ்கி செல்போன் விற்பனையாளர் உயிரிழப்பு
X

உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட போலீசார்.

சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு மகன் யோகேஷ். கோவையில் செல்போன் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று, விடுமுறை என்பதால், யோகேஷ் மற்றும் நண்பர்கள் 19 பேர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

கொடிவேரி அணை அருகே உள்ள பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது, நண்பர்களின் எச்சரிக்கையையும் மீறிய ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். இதனால், சுழலில் சிக்கிக்கொண்ட யோகேஷ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து, பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று யோகேஷின் உடலை சடலமாக மீட்டனர். இதேபோன்று, நேற்று முன் தினம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர், பவானி ஆற்றில் முழ்கி உயிரிழந்த நிலையில், மீண்டும் மற்றோருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க