அந்தியூர் கால்நடை சந்தையில் 90 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
X
அந்தியூர் கால்நடை சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளை படத்தில் காணலாம்.
By - S.Gokulkrishnan, Reporter |9 April 2022 7:00 PM IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கால்நடை சந்தையில் 90 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வாரச் சந்தை வளாகத்தில் இன்று கூடிய கால்நடைச் சந்தையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இதில் மாடுகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 5 ஆயிரம் ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய கால்நடை வர்த்தகத்தில் 90 லட்சம் ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் கூறினர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu