Begin typing your search above and press return to search.
கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா செடி வளர்த்தவரை கைது செய்த போலீசார் அவர் வளர்த்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி பஞ்சாயத்திற்குட்பட்ட காசியூர் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசியத்தகவலை அடுத்து கடத்தூர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் தோட்டத்தின் மையப்பகுதியில் 30 கஞ்சா செடி வளர்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வளர்த்த கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.