/* */

ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் செயல்படுத்தப்பட்டு, ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 100 பயனாளிகள் வீதம் மொத்தம் 1,400 பெண்களுக்கு வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன.

ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வாங்குவதற்கு ரூ.17 ஆயிரத்து 500, தீவன செலவினமாக ரூ.1,000 காப்பீட்டு தொகையாக ரூ.875 மேற்கொள்ளப்படும். மொத்த பயனாளிகளில் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள். இ

ந்த திட்டத்தில் பயன்பெற நிலமற்ற விவசாய கூலித்தொழில் செய்யும் பெண்ணாக இருக்க வேண்டும். 60 வயதுக்குள் இருக்க வேண்டும். சொந்தமாக ஆடு, மாடு, எருமைகள் வைத்திருக்ககூடாது. அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன் அடைந்தவர்களாக இருக்கக்கூடாது.

தகுதி வாய்ந்த பெண்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் நிலமற்றவர், இதர தகுதிகள் உள்ளன என்பதை சரிபார்த்ததற்கான சான்றிதழ் பெற்று, விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு கால்நடை மருந்தகத்தில் வருகிற 9-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...