/* */

பவானி அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கியதில் 6 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
X

சிறுவன் அபினேஷ்.

ஈரோடு மாட்டம் பவானி அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி சரண்யா தம்பதியினர். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள் உள்ளனர். இதில் 1ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகன் அபினேஷ் (வயது 6) வீட்டின் எதிரே உள்ள இடத்தில் விளையாடுவது வழக்கம்.

இதற்கிடையே ராமகிருஷ்ணன் என்பவர் புதியதாக வீடு கட்டுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை அடித் தளத்திற்கு 8அடி குழி தோண்டி உள்ளார். இதையடுத்து நேற்று மாலை நேரத்தில் மழை பெய்தது காரணமாக குழியில் மழைநீர் தேங்கியது. இதன் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் அபினேஷ் தீடிரென இரவில் மகனை காணவில்லை என பெற்றோர் தேடி பார்த்த நிலையில் குழியில் இறங்கி தேடியபோது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குழியில் தேங்கி நின்ற மழைநீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 20 Sep 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு