ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரத்த தானம், கண் பரிசோதனை முகாம்
70வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவையொட்டி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
HIGHLIGHTS
70வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவையொட்டி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக கூட்டுறவு அமைப்புகளை பரவலாக்குதல் மற்றும் எளிமைப்படுத்துதல் என்ற பொருளில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் ரத்ததான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம், சிறப்பாக நடைபெற்றது. முகாமை ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும், கூட்டுறவு வாரவிழா குழுவின் தலைவருமான ராஜ்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
கூட்டுறவு வாரவிழா குழுவுடன் இணைந்து ஈரோடு தி ஐ பவுண்டேஷன் நிறுவனம் மூலம் கண் பரிசோதனையும், ஈரோடு கொங்கு ரத்தவங்கி மூலம் ரத்ததான முகாமும் நடை பெற்றது. இம்முகாமில் கூட்டுறவு துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஈரோடு மேலாண்மை நிலைய பயிற்சியாளர்கள் என 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு ரத்த தானம் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இவ்விழாவில், துணைப்பதிவாளர் (ஓய்வு) ஸ்ரீதர் 55வது முறையாக ரத்ததானம் வழங்கினார்.
இம்முகாமில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மரு.செந்தமிழ்செல்வி, ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் செல்வி. .ரேணுகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொறுப்பு) கணேசன், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் ராமநாதன், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மாதேஸ், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் ஜானகிராமன், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சார் பதிவாளர் மு.பா.பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.