நீலகிரி மலைப்பகுதிகளில் தொடர் மழை : பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

X
பவானி சாகர் அணை.
By - K.Madhavan, Chief Editor |1 Oct 2021 6:38 PM IST
நீலகிரி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது, பவானிசாகர் அணை. 105 அடிகொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த வாரத்தில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த காணப்பட்டது. இதனால் அணையில் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் முதல் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாகமழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu