/* */

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவையொட்டி தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு: தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு
X

தாளவாடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

பிரபல கன்னட சினிமா நடிகர் ராஜ்குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள தொட்டகாஜனூர் கிராமம் ஆகும். ராஜ்குமார் பிறந்த வளர்ந்து ஊரான தொட்டகாஜனூரில் அவருடைய குடும்பத்தினர் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.

ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். இவரும் பிரபல கன்னட நடிகர் ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். இதைத்தொடர்ந்து தொட்டகாஜனூரில் உள்ள நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தாளவாடியில் உள்ள புனித் ராஜ்குமார் ரசிகர்கள் ஆங்காங்கே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் தாளவாடி பஸ் நிலையம், தொட்டகாஜனூர் சாலை, சாம்ராஜ் நகர் ரோடு ஆகிய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 31 Oct 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!