/* */

நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி

புஞ்சை புளியம்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற போது, நாய் குறுக்கே சென்றதில் தொழிலாளி கீழே விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

நாய் குறுக்கே ஓடியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி
X

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). மில் தொழிலாளி. இவருடைய நண்பர் செங்குந்த புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). கடந்த 3 நாட்களுக்கு முன்பு, 2 பேரும் மோட்டார்சைக்கிளில் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து காவிலிபாளையத்துக்கு, உறவினர் ஒருவர் இறந்த துக்கம் விசாரிக்க சென்றனர்.

துக்கம் விசாரித்து விட்டு திரும்பும் வழியில், புஞ்சைபுளியம்பட்டி அருகே கோப்பம்பாளையம் அருகே வந்தபோது, நாய் குறுக்கே ஓடியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும், கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் இறந்தார். இதுகுறித்து, புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 13 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...