/* */

நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு செல்லவும், குளிப்பதற்கும் வரும் 30-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

நீர்வரத்து அதிகரிப்பால் கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி தடுப்பணை.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணைக்கு ஈரோடு மட்டுமின்றி சேலம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து அதிகமாக கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணைக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கொடிவேரி அணையில் அதிகளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு செல்லவும், குளிப்பதற்கும் வரும் 30-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 20 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!