/* */

ஆசனூர் அருகே ஜெடேருத்ரசாமி கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

ஆசனூர் அருகே ஜெடேருத்ரசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

HIGHLIGHTS

ஆசனூர் அருகே ஜெடேருத்ரசாமி கோவில் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
X

சிக்குன்சேபாளையம் கிராமத்தில் நடைபெற்ற தேரோட்டம்.

தாளவாடியை அடுத்த ஆசனூர் அருகே உள்ள கேர்மாளம் சிக்குன்சேபாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஜெடேருத்ரசாமி, கும் பேஸ்வரசாமி, மாதேஸ்வரசாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. மலைக் கிராம மக்களின் காவல் தெய்வமாக இந்த கோவில்கள் விளங்குகிறது.

இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 19-ந்தேதி தீபாராதனையுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாமிக்கு தினமும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றுவந்தன. இதையடுத்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

இதற்காக சுமார் 30 அடி உயரமுள்ள தேரில் சாமி உற்சவர் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முன்பு இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடியபடி வந்தார்கள். தேர் கோவிலில் நிலை சேர்ந்ததும் ஜெடேருத்ரசாமி, கும்பேஸ்வரசாமி, மாதேஸ்வரசாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் கடம்பூர், கேர்மாளம், தாளவாடி, ஆசனூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ஆசனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 20 Nov 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்