/* */

புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

புஞ்சைபுளியம்பட்டியில் மளிகை கடையில் பட்டாசு பதுக்கியவர் கைது
X

புஞ்சை புளியம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது புளியம்பட்டி காந்திநகரில் பட்டாசு பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புளியம்பட்டி போலீசார் காந்திநகரில் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மைக்கேல் (வயது 48) என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். அந்த மளிகை கடையில் சோதனை செய்தபோது அனுமதியின்றிபட்டாசுகள் பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் பட்டாசுகளை உரிய அனுமதி இன்றி வாங்கி அதை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜ் மைக்கேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் பட்டாசுகள் பறிமுதல் செய்தனர்.

Updated On: 3 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  2. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  3. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  4. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  5. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  6. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  7. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  8. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  9. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு