/* */

நீர்வரத்து குறைவு: பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

நீர்வரத்து குறைந்ததால், பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீர்வரத்து குறைவு: பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளான ஊட்டி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழைபெய்து வந்ததது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது. பவானி சாகர் அணைக்கு, நேற்று 8 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 9 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 103.96 அடியாக இருந்தது. 3 ஆயிரத்து 308 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு, 1800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர், முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

Updated On: 20 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!