21வது முறையாக 102 அடியை எட்டிய பவானிசாகர் அணை; 6,772 கன அடி நீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறப்பு.
Bhavanisagar Dam Water Level Today In Tamil- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த கன மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று 102 அடியை எட்டியது.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணி அணைகளின் விதிதொகுப்புபடி ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 102 அடிக்கு மேல் வெள்ளநீரை தேக்கி வைக்க இயலாது என்பதால் அணைக்கு வரும் 6 ஆயிரத்து 772 கனஅடி உபரிநீர் அப்படியே ற்று மதகில் திறந்துவிடப்பட்டது.வருவாய் மற்றும் காவல்துறை சார்பில் ஆற்றில் துவைக்கவே, குளிக்கவோ கூடாது என்றும் தாழ்வான பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் வெள்ளநீர் பவானிசாகர், சத்தியமங்கலம், பெரிய கொடிவேரி, வழியாக பவானிகூடுதுறை சென்றடைந்து காவிரி ஆற்றில் கலப்பதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 1955ஆம் ஆண்டு பவானிசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து 21ஆவது முறையாக அணை 102 அடியை எட்டியுள்ளது. இதனால் கீழ்பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu