/* */

செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேர் கைது

கவுந்தப்பாடி அருகே செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேர் கைது
X

கைது செய்யப்பட்ட லோகேஷ் மற்றும் பிரகாஷ்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 15ம் தேதி சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, பெருந்தலையூர் அருகே பைக்கில் வந்த 3 பேர் கவுந்தப்பாடி செல்ல வழி கேட்டுள்ளனர்.

அய்யாசாமி வழி கூறிக்கொண்டு இருந்தபோது, அய்யாசாமியின் பாக்கெட்டில் இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அய்யாசாமி கவுந்தப்பாடி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் அய்யன்வலசு பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு பேரை விசாரணை செய்ததில், அய்யாசாமியிடம் செல்போன் திருடியது அவர்கள் என தெரியவந்தது. செல்போனை திருடிய விஜயமங்கலம் மூங்கில்பாளையத்தை சேர்ந்த கவின் என்கிற லோகேஷ் மற்றும் பவானி சன்னியாசிபட்டி பகுதியை சேர்ந்த வேல்பிரகாஷ் என்கிற பிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Updated On: 27 March 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது